Saturday, September 27, 2014

பாடல் எழுதலாம் வாங்க


பாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க
மெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க
                                                                               (பாட்டுக்)
சொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க
மெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க
                           (                                                   (சொல்லைப்)
                                                                               (பாட்டுக்)
அடிமோனை சீர்மோனை வந்திச்சா
அடியெதுகை சீரெதுகை வந்திச்சா
அடிதொடை அழகாய் வந்திச்சா
நெடில்குறில் நினைப்பில் வந்திச்சா
கோலமகள் பொருளாக வந்திச்சா
பாலநிறம் உவமையாக வந்திச்சா
அசைகூட்டிச் சீரமைக்க வந்திச்சா
இசைகூட்டிப் பாவெழுத வந்திச்சா
                                                                                (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
வேலவனே உனைப்பாட வந்தேன்
காலையிலே உனைநாடி வந்தேன்
வேளைக்குப் பதவியுயரப் போறேன்
நாளைக்குத் தேர்வெழுதப் போறேன்
இலகுவாய்த் தேர்வெழுத வரட்டும்
இலகுதாள் எனக்காய் வரட்டும்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
வேலாவா எனவெழுத வந்திச்சா
                                                                        (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
கண்டேன் அவளைக் கண்டேன்
கண்டேன் அவனைக் கண்டேன்
கண்டேன் அவர்களோடக் கண்டேன்
கண்டேன் காதலெனக் கண்டேன்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
கண்டேன் எனவெழுத வந்திச்சா
                                                                                 (பாட்டுக்)
                                                                         (சொல்லைப்)
என்னை மறந்து போவேன்
உன்னை மறந்து போவேனா?
உன்னை மறந்து போவேன்
உண்ண மறந்து போவேனா?
கண்னை மறந்து போவேன்
உறங்க மறந்து போவேனா?
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
மறந்து எனவெழுத வந்திச்சா
                                                                           (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
சின்ன இடை அழகைக் கண்டேனே
அன்ன நடை அழகைக் கண்டேனே
மெல்ல நடை நடந்து வந்தேனே
மெல்ல விலகக் கண்டு நொந்தேனே
செல்லமே உந்தன் இழுவை என்பேனே
எல்லாம் எந்தன் அகவை என்பேனே
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
காதல் வந்ததென எழுத வந்திச்சா
                                                                              (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
எழுத எண்ணினால் எழுத வருமே
அழுத கண்ணீரையும் எழுத வருமே
எழுத முயன்றால் எழுத வருமே
முழுதாய் வாழ்வையும் எழுத வருமே
இசையோடு எழுத வந்தால் வருமே
இசையோடு இசைத்துப் பாட வருமே
                                                                            (பாட்டுக்)
                                                                           (சொல்லைப்)


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

Thursday, September 18, 2014

தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்


பாபுனையும் போது
இசை (ஓசைநயம்) கருதி
சொல் எடுத்தாள முனைவோம்...
என்னமோ
வாசிக்கையிலே
"பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!" என்று
அமைந்திருந்தால்
அழகான பா/கவிதை என்பீர்!
இசை (ஓசைநயம்) அமைய
பாபுனையும் போது - நம்
முயற்சி எப்படியோ
அப்படித்தானே
பா/கவிதை அமையும் என்பதை
நாமறிவோம் - அதை
பாவலர் ரமணி அவர்கள் - தங்கள்
பாவண்ணத்தில் அளந்து விட்டதை
பாபுனைய விரும்பும்
உங்கள் எண்ணத்தில் வெளிப்படுத்த
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
கொஞ்சம் படித்துத் தேறுங்களேன்!

" சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
http://yaathoramani.blogspot.com/2014/09/blog-post_16.html "

பாபுனைய விரும்பும் வேளை
நாம் தேடித் தேறிய
சொல்களின் கூட்டழகு
அடிகளின் நடையழகு
படிக்கையில் உணரும் இசையழகு
எல்லாம் தானே துணைக்கு வருவதால்
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
நல்ல பாவலனாக்கப் பணி செய்யுமே!

Tuesday, September 2, 2014

உன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா? கவிதையா?

நேர்காணல் (பேட்டி) காணும் ஊடகவியலாளர்
"உங்களால் பாட முடியுமா?" என்று கேட்க
"கழிவறையில் முணுமுணுப்பேன் - ஆனால்
பாட்டா பாடவே வராது" எனப் பதில் தரும்
நம்ம திரைப்பட நடிகைகள்
கழிவறையில் படிப்பது
பாட்டா? கவிதையா?
பாட்டும் கவிதை தானே
ஓசை அழகு கவிதைக்கு அழகென்றால்
இசையோடு இசையும் பாவரிகளே
பாட்டிற்கு அழகு என்பேன்!
"என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சு" என்ற
பாவரிகளில் எதுகை முட்டுவதே இசை!
"என்னத்தான் உன்னைத்தான்" என்றும்
"மயக்கமா கலக்கமா" என்றும்
பாடும் போது பாரும்
ஈற்றில் வரும் "தான்" உம் "மா" உம் தானே
இசையோடு இசைய வைக்கிறதே!
எழுதுதாளை எடுத்து
எழுத்துகோலைப் பிடித்ததும்
கவிதை வந்து விடுமா?
கவிதை வரும் வரை
எத்தனையோ எண்ணுவோம்
ஈற்றில் ஏதாவது கிறுக்குவோம்
ஓசை அழகோடு அமைந்தால்
கவிதை என்கிறோம் - அந்த
முயற்சி தானே பாடல் எழுதவும்
வழிகாட்டி நிற்கிறதே!
"பள்ளிக்குப் போகும் தோழியின்
துள்ளிப் பறக்கும் தோள் துண்டை (சோலை)
அள்ளிக் கொண்டு போனது காற்று!" என
பள்ளி, துள்ளி, அள்ளி என அமைத்து
பா/கவிதை புனைவது போலத் தான்
"என்னை நீ பார்த்த போதும்
உன்னை நான் பார்த்த போதும்
கண்கள் தானே இணைந்த போதும்
எண்ணம் தானே இணையாத போதும்
காதல் தானே துணையாக வருமா?" என
போதும், போதும், போதும், போதும் என
இசையோடு இசையும் வரிகளால்
பாடல் புனைவது இலகு அல்ல!
வழிநெடுகப் படித்தாலும் சரி
கழிவறையில் முணுமுணுத்தாலும் சரி
பாடிப் பாடிப் பழகினால் வரும்
பாடல் புனையும் ஆற்றல் என்பேன்!
"எண்ண எண்ணப் பெண்களடா
 வண்ண வண்ணக் கண்களடா" என
எடுப்பு (பல்லவி) எழுதிப் பின்
"மின்ன மின்ன நடப்பாளவை
கன்னம் நோகவே அடிப்பாளவை" என
தொடுப்பு (அனுபல்லவி) எழுதிப் பின்
"காதல் வந்து அவளைத் தொடர
மோதல் வந்து அவள் அடிக்க
கன்னம் சிவக்க அடி வேண்ட
கனவும் கலைய நானும் விழித்தேனே!" என
கண்ணி (சரணம்) அமைத்து கவிதை எழுதி
கழிவறையில் முணுமுணுத்தாலும் பாடலாகுமா?
கவிதை எழுதிப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் பரவாயில்லை
பாடல் போலப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் எழுதுங்களேன்...
ஈற்றில் என்னை மறந்தாலும்
எங்கள் தாய்த் தமிழை மறவாது
பாடலாக எழுதியே வெளிப்படுத்தவே
பாப்புனையத் தானே விரும்புங்களேன்!


யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்-012 வரை எழுதிய, நான் புதுக்கவிதை விரும்பிகளையும் இணைத்துச் செல்லவே இடைவெளி விட்டேன். ஆயினும், விரைவில் இதனைத் தொடரவுள்ளேன்.