Monday, November 17, 2014

பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!

பாவலராவது என்பது
பிறக்கும் போதே வந்ததல்ல
எமது முயற்சியின் விளைவாய் மலர்ந்ததே!
அன்று பத்திரிகை, மூ.மேத்தாவின் நூல்கள்
இன்று வலைப்பூக்கள் என்றெல்லாம் படித்தே
எவராச்சும் எழுதிய பா/ கவிதை போல
பாப்புனைய முயற்சி செய்கிறேன் - எனக்கும்
பாவலராக விருப்பம் (ஆசை) இருப்பதால் தான்!
பிறப்பிலேயே பாவலர்/ கவிஞர் உருவானாரா
பிறந்த பின் வாழும் வேளை
பாவலர்/ கவிஞர் உருவாக்கப்பட்டாரா
என்றெல்லாம் அரங்குகள் தோறும்
பட்டிமன்றங்கள் நிகழ்ந்தாலும்
பாவலர்/ கவிஞர் பிறக்கவில்லை
சூழலால் உருவாக்கப்படுகின்றார் என்றே
என் உள்ளத்தில் மலர்ந்த முடிவு!

பாப்புனைய விரும்பும் உறவுகளே
எனது எண்ணங்களைப் பார்த்து
பாப்புனையும் திறனைப் பெருக்கியிருந்தாலும்
தீபாவளி (2014) நாளை முன்னிட்டு நடாத்திய
பாப்புனையும் திறன்காண் போட்டியில்
பங்கெடுத்த எல்லோருக்கும் வாழ்த்துகள்!
எண்ணங்களை வெளிப்படுத்தும் பா/ கவிதை
கண்ணால் படம் பார்த்ததும் - உங்கள்
உள்ளத்தில் தோன்றிய பா/ கவிதை என
இரண்டு பா/ கவிதை புனைந்த - உங்களுக்கு
பாப்புனைதலில் பட்டறிவு கிட்டியிருக்குமே!
போட்டிகளில் வெற்றி பெறமுன்
போட்டிகளில் பங்கெடுத்த முயற்சியே
பாவலராகக் கிடைத்த வெற்றி என்பேன்!

போட்டிகளில் பங்கெடுத்தவருக்குக் கொண்டாட்டம்
வெற்றியாளரைத் தெரிவு செய்வதில்
நடுவர்களுக்குத் தான் திண்டாட்டம் என்பேன்!
நண்பர் ரூபன் சுட்டிக் காட்டியது போல
ஐம்பத்திநான்கு பாப்புனையும் ஆற்றலாளர்களிடையே
பத்துப் பாப்புனையும் திறனாளர்களை
பாப்புனையும் நுட்பங்களை வைத்தே
நடுவர்களும் தெரிவு செய்திருப்பர் என்பேன்!
ஏனெனில்
போட்டியில் பங்கெடுத்த எல்லோருமே
பாப்புனைதலில் வென்றவர்களே என்பேன்!!
எப்படியிருப்பினும்
பாப்புனைந்து போட்டியில் வென்ற
பத்துப் பேரையும் வாழ்த்துங்கள் - அந்த
பத்துப் பேரினது பாக்கள் - நாம்
கற்றுக்கொள்ள வழிகாட்டும் என்பேன்!
பத்துப் பேரினது இருபது பாக்களைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்,,,
http://www.tamilkkavitaikalcom.blogspot.com/2014/11/2014.html
பாப்புனைந்து வென்றவர்களை வாழ்த்துங்கள்!


Monday, November 10, 2014

யாப்புச் சூக்குமம் படித்துப் பாருங்களேன்!

அறிஞர் ஜோசப் விஜூ அவர்களின்
ஊமைக்கனவுகள் தளம் பார்த்தீர்களா?
யாப்புச் சூக்குமம் முதற் பகுதியில்
அசை, சீர் பற்றிய விரிப்புத் தான்...
அழகாய் ஐந்து குறளைத் தந்தார்
அசை, சீர் பிரித்து அலகிட்டால்
அடுத்த பதிவில் - உங்களை
வெண்பா எழுத வைத்துவிடுவேன் என்றாரே!
நானும் படி, படியென்று படித்த பின்
அடுத்த பதிவிற்குள் தலையை ஓட்டினேன்...
விதி கூறிச் சொற்களைக் கூறிடுதல்,
எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல்,
அடி வரையறை தொட்டு அப்பால்
வெண்பா, இலக்கண நுட்பங்கள் கூறியே
புலவர் வெண்பா புனைய வைத்துவிடுகிறாரே!
வெண்பா புனைய வைத்த புலவர்
உண்மையில் தானெழுதிய தேர்வாக - எம்
கற்றலில் முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்தவே
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' என்றொரு
பதிவைப் பாரென ஈற்றில் பகிர்ந்தாரே!

பாபுனைய விரும்பும் உள்ளங்களே!
யாப்பறிந்து வெண்பாப் புனைய
ஊமைக்கனவுகள் பக்கம் வாருங்கள்...
யாப்புச் சூக்குமம் - 01 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post.html
புகைவண்டியில் செல்லும் யாப்பிலக்கணம் படித்தேன்
அதுவென் உள்ளத்தில் ஊருதே என்றிருக்க
யாப்புச் சூக்குமம் - 02 இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/ii.html
புகைவண்டியால இறங்கியதும் தொடங்கினாரே
வெண்பா இலக்கணம் இதுவென உரைத்தாரே!
'வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்' இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_13.html
"தளை தவறினால் யாரும் - உங்கள்
தலையை எடுத்துவிடப் போவதில்லை.
தவறை இனம் காணப் பழகுங்கள்." என்ற
வழிகாட்டலைப் பட்டறிவோடு கலந்து
வெண்பாப் புனைகையில் கற்றுத்தேறென
முதிர்ச்சியை (தெளிவை/ நிறைவை) ஏற்படுத்துகிறாரே!
யாப்புச் சூக்குமம்-III இல்
http://oomaikkanavugal.blogspot.com/2014/12/iii.html
விருத்தத்தின் எலும்புக்கூடு என
விருத்தத்தின் கட்டமைப்பு
எப்படி இருக்குமெனப் பாருங்களென
ஆசிரியப்பாவை விளக்குகிறாரே!
யாப்புச் சூக்குமம் IV இல்
http://oomaikkanavugal.blogspot.com/2015/01/iv.html
விருத்தத் தூண்டில் என்ற தலைப்பின் கீழ்
"மரபுக் கவிதைகளில்
ஒரு பாடலின் சந்தம்
உங்களைக் கவருகிறது என்றால்
அதனை
இப்படிப் பிரித்துப் பார்த்துவிட்டீர்கள் என்றால்
அதன் வடிவம் உங்களுக்குப் புலப்பட்டுவிடும்.
பின்பு அந்த வடிவத்திற்கு
நீங்கள் உயிர் கொடுக்கலாம்." என வழிகாட்டி
யாப்புச் சூக்குமம் தொடரை முடித்து வைக்கின்றாரே!

அங்கே போய் - நன்றே
வெண்பா புனையக் கற்றபின்
பண்ணோடு பாபுனைந்து - நீங்களும்
செந்தமிழைப் புகழ்ந்து பாடுங்களேன்!

Wednesday, November 5, 2014

அசை, சீர், தளைக்கான சுருக்குவழி அறிவோம்!

அண்மையில் (04/11/2014)
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
"மரபு கவிதை எழுதுவதில்
மொழி ஆளுமை நிறைய வேண்டும்.
இலக்கணத்துக்காக வார்த்தைகளைத் தேடி எழுதுவதில்
தேவை இல்லாத வார்த்தைகள் இடம் பிடித்து
கவிதையின் அழகு கெடுவதைப் பார்க்கிறேன்." என்று
தன் எண்ணத்தைப் பகிர்ந்த
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
கருத்தைப் (Comments) படித்த வேளை - அவரது
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவின் இணைப்பு - அதில்
இருக்கக்கண்டு சொடுக்கிப் படித்தேன் - அதில்
பாப்புனைய விரும்புவோருக்குப் பயன்தரும்
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி இருப்பதாக
எண்ணியதன் விளைவு தான் - அவரது
பதிவைப் பகிர விரும்ப வைத்ததே!

யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரில்
(1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12)
நான் பா நடையில் பதிவு செய்த
எழுத்து, அசை, சீர் பற்றிப் படித்தவர்களுக்கு - அதனை
நினைவூட்டிக்கொள்ள உதவுமென நம்பியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படி
அசை, சீர், தளைக்கான சுருக்குவழிகளை அறி என்று
சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! - நான்
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள் தொடரின்
எஞ்சிய பகுதிகளை விரைவில் தர
முயற்சி செய்துகொண்டு தானிருக்கிறேன்!

"எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" " என்று
எனது முன்னைய பதிவில் எழுதியதை
கொஞ்சம் மீட்டுப் பாருங்களேன்...
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!" என்றால்
பாப்புனையும் ஆற்றல் இருந்தால் தான்
பாவும் உள்ளத்தில் கருவுறும் என்பேன்!

எடுப்பாக, மிடுக்காகச் செல்ல
ஆணென்றால் பட்டுவேட்டி
பெண்ணென்றால் பட்டுச்சேலை
மணிக்கணக்காக இருந்து உடுத்தினாலும்
உடுக்க ஓர் ஒழுங்கு இருப்பது போல
உள்ளத்தில் உரசிய உண்மையைக் கூட
வெளிப்படுத்த உதவும் ஓர் ஒழுங்கு தான்
பாப்புனையும் ஆற்றல் என்பேன்! - அந்த
ஆற்றலை வளர்த்துக் கொள்ள
யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்!

யாப்பறிந்து பாப்புனையும் வேளை
நேரசை, நிரையசை அறிந்து சீராக்கி
சீராக்கும் வேளை அசைபிரித்து அடியாக்கி
அடியாக்கும் வேளை தளையறிந்து தொடையாக்கி
தொடையறிந்து பாவாக்கிச் செல்லும் வேளை
அசை, சீர், தளைக்கான சுருக்குவழி உதவுமே! - அப்ப
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கியே
அறிஞர் ஜி.எம்.பாலசுப்பிரமணியம் அவர்களின்
"கவிதை கற்கிறேன்" என்ற பதிவைப் படியுங்களேன்!

http://gmbat1649.blogspot.in/2011/08/blog-post_29.html

Tuesday, November 4, 2014

பாவலர் நா.முத்துநிலவன் வழிகாட்டுகின்றார்!


எழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா?
எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா?
தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா?
எண்ணியதும் எழுதநாம் காளமேகப் புலவரா?
"பாவும் உள்ளத்தில் கருவுற்றாலே!"

பிரபல நாடக, திரைப்பட வசன ஆசிரியர் கிரேசி மோகன்
வெண்பாப் புனைவதில் வல்லவரெனத் தொடங்கி
எடுத்துக்காட்டாக
எட்டு வெண்பாக்களில் இரண்டரை மட்டும் என்று தொட்டு
யாப்பிலக்கண வழு சுட்டியும் விளக்கியும்
"நமது மரபுப் பாவகைகள்
எல்லாவற்றையும் கரைத்துக் குடித்து,
அதன் பிறகுதான் எழுதவேண்டும் என்று
சொல்ல மாட்டேன்." என்ற பின்
"கொட்டிக் கிடக்கும் குவியலான
பாவகைத் தங்க வைரக் கட்டிகளை எடுத்து, அதில்
வகைவகையான புதுக்கவிதை ஆபரணங்களைச் செய்து
தமிழ்த்தாய்க்குச் சூட்டுங்கள் என்றுதான்
உரிமையோடு வேண்டுகிறேன்." என்றுரைக்கும்
பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின் வழிகாட்டல்
பாப்புனைய விரும்புவோருக்குக் கோடி பெறுமதி!

முதலில் அகத்தியர் தான்
தமிழ் இலக்கணம் வகுத்தார் என்பது
என் கருத்து என்றாலும் - உங்கள்
எண்ணப்படி முதலாம் இலக்கண நூலாம்
தொல்காப்பியத்தில் கூட பல இடங்களில்
தனக்கு முன்னோர் கூறியதில் இருந்தே
தான் படித்துத் தெளிந்ததை வைத்தே
எழுதியதாகத் தொல்காப்பியரும் சொன்னாரெனின்
நாமும் முன்னோர் நூல்களைப் படித்தே
பாக்களைப் புனைவோம் வாருங்கள்!

அதற்காகவே பாவலர் நா.முத்துநிலவன் அவர்களின்
"இளைய கவிஞர்கள் கவனிக்க" என்ற பதிவில்
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
படிக்க வேண்டிய தொகுப்புகள் பலவுள என்று
எடுத்துக்காட்டாகத் தொடுத்துமுள்ளார்...
பாப்புனைய விரும்புவோரே - நீங்கள்
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
படித்துப் பயன்பெற்றுப் பெரிய பாவலராக
வாழ்த்தி நிற்பது - உங்கள்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன்!