Saturday, August 10, 2013

முதன்மைப் பதிவராக...

நான்
எழுத்துலகில் எண்பத்தேழில்
கால் பதித்தாலும்
தொண்ணூறிலேயே
என் முதற் கவிதை
பத்திரிகையிலே வெளியானது!
எழுதுங்கள்
என்றோ ஒரு நாள்
எழுத்துகள் சிறக்கும் என
அறிஞர்கள் எனக்கு வழிகாட்டினர்!
எழுதினேன் பத்திரிகையிலே
அன்று
ஆனால், இன்று
இணையவழியில்
வலைத்தளங்களில், வலைப்பூக்களில்
பதிவராகப் பதிகின்றேன்
நல்ல பல பதிவுகளை!
எனக்கு ஒரு துயரம்
என் பதிவுகளுக்கு
ஒருவரும் கருத்துக் கூறுவதில்லை...
என் துயரைப் போக்க
அறிஞர்கள் பலரின் தளங்களைப் படித்தேன்...
"ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூற
ஒருவரும் இல்லையா?
பொய்... பொய்... பொய்...
நீ
எத்தனை பதிவரின் பதிவுக்கு
கருத்துக் கூறினாய்
உன் பதிவுக்கு
எவராச்சும் கருத்துக் கூற" என்று
அறிஞர்கள் சிலர் கேட்டனர்!
நேரம்
பலருக்கு இறுக்கம் தான்
எனக்கும் தான்
என்றாலும்
சில நேரங்களில்
சிலரின் பதிவுகளுக்கு
கருத்துக் கூறுவதால் தான்
ஒரு பதிவைப் பதிந்த பின்
ஒரு கருத்துக் கூட
எனக்கு எட்டுகிறதே!

குறிப்பு: புதிய பதிவர்களே! எனது நண்பர்கள் முதன்மைப் பதிவராக மின்னுவதற்குக் காரணமே, நேரம் உள்ள போதெல்லாம் பிறரது பதிவுக்குக் கருத்துக் கூறுவதால் தான். நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டியள்... என்றாலும் சொல்கிறேன். கூகிள் வலைப்பூவில் நண்பர் ஒருவர் ஒரு பதிவைப் பதிந்தால் கிட்டத்தட்ட நூறு பதில் கருத்துகளைப் பெறுகிறரே! அப்படியாயின், அவர் நூற்றுக்கு மேற்பட்ட பதிவர்களின் பதிவுகளுக்குக் கருத்துக் கூறுகிறார் போலும்! அப்படித்தான் நானும் எண்ணுகிறேன்.

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
உங்கள் யாழ்பாவாணன்.